​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூரில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் தீ விபத்து

Published : Jun 29, 2024 11:49 AM

வேலூரில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் தீ விபத்து

Jun 29, 2024 11:49 AM

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் ஏற்பட்டிருந்த வைக்கோல் பிரி சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி உரசி தீ பற்றி எரிந்தது.

சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் இருந்து வைக்கோல் பிரிகளை ஏற்றிக் கொண்டு குடியாத்தம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அந்த விபத்து ஏற்பட்டது. இதை பார்த்ததும் ஓட்டுநர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு லாரியை ஓட்டிச் சென்று நிறுத்தினார். அங்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.