​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோட்டில் அரசுப்பேருந்து கண்ணாடியை கல் வீசி உடைத்த போதை ஆசாமியை போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துனர்

Published : Jun 29, 2024 9:07 AM

ஈரோட்டில் அரசுப்பேருந்து கண்ணாடியை கல் வீசி உடைத்த போதை ஆசாமியை போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துனர்

Jun 29, 2024 9:07 AM

ஈரோடு அருகே அரசுப் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை கல்லை வீசி உடைத்த நபரை ஓட்டுநரும், நடத்துனரும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மது போதையில் இருந்ததாக கூறப்படும் வெள்ளியங்கிரி, சக பேருந்து பயணிகளுக்கு தொந்தரவு அளித்ததால் ஓட்டுநரும், நடத்துனரும் அவரை கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து, பேருந்து மீது கல்லை வீசியதாக வெள்ளியங்கிரி போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.