​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விடுமுறை கொடுக்காமல் அலைக்கழித்ததால்... தீயணைப்புத் துறை நிலைய அலுவலரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

Published : Jun 29, 2024 7:18 AM

விடுமுறை கொடுக்காமல் அலைக்கழித்ததால்... தீயணைப்புத் துறை நிலைய அலுவலரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

Jun 29, 2024 7:18 AM

பண்ருட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் வேல்முருகனின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதாக தீயணைப்பு வீரர்கள் குமரேசன் மற்றும் அருள்பிரகாஷ் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விடுமுறை கொடுக்காமல் அலைக்கழித்த ஆத்திரத்தில், வேல்முருகனின் வீட்டுக்குச் சென்ற வீரர்கள் இருவரும் , அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தியது விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்ததாக  போலீசார் கூறினர்.