​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி நகரில் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 88 பேருக்கு எச்சரிப்பு மெமோ... இரவு நேரத்தில் தொடர் வழிப்பறிகள் நடந்ததாக புகார்

Published : Jun 27, 2024 4:05 PM

திருச்சி நகரில் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 88 பேருக்கு எச்சரிப்பு மெமோ... இரவு நேரத்தில் தொடர் வழிப்பறிகள் நடந்ததாக புகார்

Jun 27, 2024 4:05 PM

திருச்சி மாநகரில் இரவு ரோந்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஆய்வாளர்கள் உள்ளிட்ட 88 பேருக்கு காவல் ஆணையர் காமினி எச்சரிப்பு மெமோ வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காந்தி மார்க்கெட் காவல் சரகத்தில் கடந்த 23-ஆம் தேதி குறிப்பிட்ட 88 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் 2 சிறுவர்கள் மற்றும் இளைஞர் ஒருவர் பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு மெமோ வழங்கியுள்ள ஆணையர், பணியில் இனியும் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பதாக தெரிகிறது.