​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 8 சிறார்கள் மீட்பு... படகு உரிமையாளர்களுக்கு அபராதம், மானிய டீசல், மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து

Published : Jun 27, 2024 3:09 PM

மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 8 சிறார்கள் மீட்பு... படகு உரிமையாளர்களுக்கு அபராதம், மானிய டீசல், மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து

Jun 27, 2024 3:09 PM

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவோரில் சிறுவர்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த 14 முதல் 18 வயதுக்குள் இருந்த 8 சிறுவர்களை  மீட்டனர்.

தொடர்ந்து, சிறுவர்களை ஈடுபடுத்திய படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசலை இந்த வழக்கு முடியும் வரை ரத்து செய்து உத்தரவிட்டனர்.