​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிடிஆர் எனக் கூறி, டிக்கெட் உறுதியாகாத பயணிகளிடம் மோசடி.. ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞனை கைது செய்த போலீசார்

Published : Jun 27, 2024 12:50 PM

டிடிஆர் எனக் கூறி, டிக்கெட் உறுதியாகாத பயணிகளிடம் மோசடி.. ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞனை கைது செய்த போலீசார்

Jun 27, 2024 12:50 PM

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிடிஆர் எனக் கூறிக்கொண்டு, டிக்கெட் உறுதியாகாத பயணிகளை குறிவைத்து, துண்டு சீட்டு கொடுத்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். 

டிக்கெட் உறுதியாகாத பீகார் மாநில இளைஞர் ஒருவரை அணுகிய ஆசாமி, அதிலிருந்து ஒரு துண்டு சீட்டை கிழித்துக் கொடுத்து, இந்த சீட்டை காண்பித்தால் இருக்கை ஒதுக்கப்படும் என்றும், அதற்கான குறுஞ்செய்தியும் செல்போன் எண்ணுக்கு வரும் என்றும் கூறிவிட்டு, இளைஞரிடமிருது 900 ரூபாயை வாங்கியுள்ளான்.

ஆனால் அவன் சொன்னதுபோல் குறுஞ்செய்தி வராத நிலையில், இளைஞரின் புகாரின் பேரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் ஷா என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.