​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படாத கிழக்கு கடற்கரை சாலை.. குண்டும் குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாய நிலை

Published : Jun 27, 2024 7:57 AM

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படாத கிழக்கு கடற்கரை சாலை.. குண்டும் குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாய நிலை

Jun 27, 2024 7:57 AM

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தினால் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் மேல அரசடி வரையில் சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பல்வேறு இடங்களில் அடித்துச் செல்லப்பட்ட சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாலும், பல இடங்களில் குண்டும் குழியுமாக கிடப்பதால் விபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.