​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல பெண்கள் பெயரில் பல லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவான மகளிர் சுய உதவிக்குழு தலைவி

Published : Jun 27, 2024 7:43 AM

பல பெண்கள் பெயரில் பல லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவான மகளிர் சுய உதவிக்குழு தலைவி

Jun 27, 2024 7:43 AM

மகளிர் சுய உதவிக்குழு நடத்தி தங்களுக்கேத் தெரியாமல் தங்களது பெயரில் பல நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி விட்டு தலைமறைவான குழு தலைவி மீது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் புகார் அளித்தனர்.

சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவர், சுய உதவிக்குழு பெண்களின் ஆதார் அட்டையைப் பெற்று அதனை நிதி நிறுவனங்களில் செலுத்தி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

ராணி தலைமறைவான நிலையில், கடனை திரும்ப கட்டக் கோரி நிதி நிறுவன ஊழியர்கள் தங்களை மிரட்டி வருவதாக அப்பெண்கள் தெரிவித்தனர்.