​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசூரில் டேங்கர் லாரி மீது ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது லாரி ஓட்டுநர் உள்பட 2 பேர் விபத்தில் உயிரிழப்பு

Published : Jun 26, 2024 6:04 PM

ஓசூரில் டேங்கர் லாரி மீது ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது லாரி ஓட்டுநர் உள்பட 2 பேர் விபத்தில் உயிரிழப்பு

Jun 26, 2024 6:04 PM

ஓசூர் அருகே டேங்கர் லாரி மீது ஆலமரம் விழுந்ததில் அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிரிழந்தனர்.

மத்திகிரி குச்சிமிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அந்த பகுதியில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து  விழுந்தது.

இதில் ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் கிளீனர் மாரப்பா உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேர்ப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டிருந்ததால் மரம் சாய்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.