​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோட்டில் பேருந்துகளின் கண்ணாடியை கல்லால் உடைத்த 2 பேரை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

Published : Jun 26, 2024 4:28 PM

ஈரோட்டில் பேருந்துகளின் கண்ணாடியை கல்லால் உடைத்த 2 பேரை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

Jun 26, 2024 4:28 PM

ஈரோட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் 4 பேருந்துகளின் கண்ணாடியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உடைத்து சென்றது அருகில் உள்ள  சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.

வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான பேருந்துகளை இரவு நேரத்தில் கரூர் செல்லும் சாலையோரம் சோலார் பகுதியில் டிரைவர்கள் நிறுத்தி வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. காலையில் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் சென்று பார்த்தபோது பேருந்துகளின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது தெரியவந்தது.

அருகில் இருந்த சிசிடிவிகளை ஆராய்ந்ததில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பேருந்து அருகில் நின்று பேசிவிட்டு திடீரென கல்லை எடுத்து பேருந்துகளின் கண்ணாடியை உடைத்துச் சென்றது பதிவாகியுள்ளது.