​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

Published : Jun 26, 2024 1:10 PM

கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

Jun 26, 2024 1:10 PM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றில், பேருந்து நிலையம் அருகே இருந்த சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது.

இதில், வாழை இலைக்கட்டுகளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்த மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களில் இருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தாஸ் என்பவர் உயிரிழந்தார்.

மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.