​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிபிஐ நடவடிக்கை....

Published : Jun 26, 2024 7:22 AM

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிபிஐ நடவடிக்கை....

Jun 26, 2024 7:22 AM

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது.

அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளநிலையில், கடந்த திங்கட்கிழமை திகார் சிறையில் சிபிஐ அதிகாரிகள் கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு அவர் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.