​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் ஆம்னி பேருந்துகள் சோதனை- 2 பேருந்துகள் பறிமுதல்... நடுரோட்டில் தவித்த 58 பயணிகள்

Published : Jun 22, 2024 7:26 AM

தூத்துக்குடியில் ஆம்னி பேருந்துகள் சோதனை- 2 பேருந்துகள் பறிமுதல்... நடுரோட்டில் தவித்த 58 பயணிகள்

Jun 22, 2024 7:26 AM

தூத்துக்குடியில் இருந்து அனுமதி இல்லாமல் பெங்களூருக்கு இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிமாநில பதிவுஎண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகப் பதிவெண்ணுக்கு மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடியில் 20க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன.

2 பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்ததால், நடுரோட்டில் தவித்த 58 பயணிகளுக்கு அரசுப்  போக்குவரத்து கழகம் மூலம் பெங்களூர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.