​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கத்தியைக் காட்டி மிரட்டி ஜவுளி கடையில் துணிகள் கொள்ளை...

Published : Jun 21, 2024 4:21 PM

கத்தியைக் காட்டி மிரட்டி ஜவுளி கடையில் துணிகள் கொள்ளை...

Jun 21, 2024 4:21 PM

சென்னை அடுத்துள்ள படப்பையில் துணிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி 18 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள துணிகளை அள்ளிச் சென்று தலைமறைவாக இருந்தவர் போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கையில் மாவுக்கட்டு போடப்பட்டது.

சி.சி.டி.வி பதிவு மூலமாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், செய்யாறைச் சேர்ந்த விக்னேஷ் என்பவன் தலைமறைவானதோடு, கடை உரிமையாளருக்கு செல்ஃபோனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

அதனையடுத்து, செல்ஃபோன் சிக்னல் மூலமாக தேடிச் சென்ற போது தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.