​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய நிலங்களுக்குள் குளம்போல் தேங்கி நிற்கும் வெள்ள நீர்..

Published : Jun 21, 2024 3:40 PM

விவசாய நிலங்களுக்குள் குளம்போல் தேங்கி நிற்கும் வெள்ள நீர்..

Jun 21, 2024 3:40 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மணவாளக்குறிச்சி பகுதியில் வாளியாற்று கிளை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து நாற்றுகள் அழுகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தண்ணீர் பற்றாக்குறையால் மே மாத நடவு பணிகள் தள்ளிப்போன நிலையில் தற்போது நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மேலும் ஒரு மாதம் நடவு தள்ளி போக வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினர்.