​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்... தாய், மனைவி உள்பட 6 பேர் கைது

Published : Jun 21, 2024 7:02 AM

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்... தாய், மனைவி உள்பட 6 பேர் கைது

Jun 21, 2024 7:02 AM

கொள்ளையில் ஈடுபட்ட பணத்தைக் கொண்டு 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பின்னிங் மில்லை விலைக்கு வாங்கிய நபரை ராஜபாளையம் போலீஸார் தேடி வருகின்றனர்.

தெற்கு ஆண்டாள்புரத்தில் 56 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 2 பேரிடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கு இந்த கொள்ளை சம்பவத்திற்கு பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவன் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து மூர்த்தியின் தாய் மற்றும் மனைவி உள்பட 6 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 150 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம், 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தலைமறைவான மூர்த்தியை தேடி வருகின்றனர்.