​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சியில் நீதிமன்ற அனுமதியுடன் நிபுணர்கள் வெடிபொருட்களை அழித்த போது வீடுகளில் விரிசல் எனப் புகார்

Published : Jun 19, 2024 7:15 AM

பொள்ளாச்சியில் நீதிமன்ற அனுமதியுடன் நிபுணர்கள் வெடிபொருட்களை அழித்த போது வீடுகளில் விரிசல் எனப் புகார்

Jun 19, 2024 7:15 AM

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை பாலமநல்லூர் தனியார் கல்குவாரியில் போலீசார் வெடிக்கச் செய்து அழித்தபோது வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

குவாரியை முற்றுகையிட்டவர்களிம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் ஆய்வாளர் குமார், நீதிமன்ற அனுமதியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களைக் கொண்டே வெடிபொருட்கள் அழிக்கப்பட்டதாகவும் சேதம் ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்து தருவதாகவும் சமாதானம் செய்தார்.