​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிராமங்கள்தோறும் யோகா, திணை உணவுகள் பற்றிய விழிப்புணர்வை, மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்: பிரதமர்

Published : Jun 18, 2024 4:43 PM

கிராமங்கள்தோறும் யோகா, திணை உணவுகள் பற்றிய விழிப்புணர்வை, மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்: பிரதமர்

Jun 18, 2024 4:43 PM

கிராமங்கள்தோறும் யோகா மற்றும் திணை உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரம் சார்ந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பள்ளிகள், அங்கன்வாடிகள், சுகாதார மையங்களில் யோகா சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நமது பண்டைய கலாச்சாரத்தின் பரிசான யோகா, உடல் மற்றும் மன நலனை பேண உதவுவதாகவும், திணை உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.