​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மயிலாப்பூரில் ஆறு வயது சிறுவனை தெரு நாய் கடித்து காயம்

Published : Jun 18, 2024 3:06 PM

சென்னை மயிலாப்பூரில் ஆறு வயது சிறுவனை தெரு நாய் கடித்து காயம்

Jun 18, 2024 3:06 PM

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதியில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவனின் முகம், கை, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் சாய் ஈஸ்வரன் நேற்று மாலை வீட்டு வாசலில் தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நாய் சிறுவனை கடித்ததாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு குழந்தையை மீட்டு பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் முகத்தில் மூன்று தையல் போடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.