​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோதிடர் சொன்னதால் பிறந்து 38 நாளே ஆன சொந்த பேரனை கொன்ற தாத்தா.. அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

Published : Jun 17, 2024 6:44 PM

சோதிடர் சொன்னதால் பிறந்து 38 நாளே ஆன சொந்த பேரனை கொன்ற தாத்தா.. அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

Jun 17, 2024 6:44 PM

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையால் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்று சோதிடர் கூறியதால், பிறந்து 38 நாளே ஆன ஆண் குழந்தையை தாத்தாவே தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றது அம்பலமாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்- சங்கீதா தம்பதியின் குழந்தை கடந்த 14ஆம் தேதி குளியல் அறையில் உள்ள பேரலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

யாரோ குழந்தையை துணியில் சுற்றி நீரில் போட்டுச் சென்றுள்ளதாக ஜெயங்கொண்டம் காவல்துறையினரிடம் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடத்தியபோது, தாத்தா வீரமுத்து முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், உயிருக்கு ஆபத்து என்று கருதி குழந்தை சாத்விக்கை தூக்கிச்சென்று கொன்றதாக வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வீரமுத்துவை கைது செய்தனர்.