​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து தூங்கிய போதை ஆசாமி...

Published : Jun 14, 2024 6:52 PM

கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து தூங்கிய போதை ஆசாமி...

Jun 14, 2024 6:52 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரே  உள்ள  கழிவு நீர்வாய்க்காலில் மனித உடல் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் 8அடி ஆழமுள்ள  கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிஅந்த உடலை  தூக்கினர்.

அப்போது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.. விசாரணையில் மதுரை இளம்பனூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாக்யராஜ் மதுபோதையில்  கழிவு நீர் வாய்க்காலில் விழுந்த நிலையில் உறங்கிவிட்டதாகவும் அவருக்கு அறிவுரைகூறி அனுப்பியதாகவும்  போலீசார் தெரிவித்தனர்.