​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்டா விவசாயிகளுக்கு ரூ.78.67 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Published : Jun 14, 2024 4:08 PM

டெல்டா விவசாயிகளுக்கு ரூ.78.67 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Jun 14, 2024 4:08 PM

டெல்டா விவசாயிகளுக்கு 78 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு நீர் திறக்க தாமதமாகி வரும் நிலையில், 2,000 டன் விதை நெல்லை மானிய விலையில் வழங்கவும் நெல் நடவு இயந்திர மானியமாக ஏக்கருக்கு 4,000 ரூபாய் வழங்கவும் அரசு முன்வந்துள்ளது.

வேளாண் தொழிலாளர்கள் வேலை இழப்பை ஈடுசெய்யும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்கவும் 24 கோடியே 50 லட்ச ரூபாயை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.