​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சிபுரம் வையாவூரில் 30க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு... மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

Published : Jun 14, 2024 1:01 PM

காஞ்சிபுரம் வையாவூரில் 30க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு... மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

Jun 14, 2024 1:01 PM

காஞ்சிபுரம் அடுத்த வையாவூரில் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்கு குடிநீரை பராமரிக்கத் தவறிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் வையாவூரில் கடந்த சில தினங்களாகவே 30க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

.அவர்களில் 85 வயதான சரோஜா என்ற மூதாட்டி உயிரிழந்தார். சுகாதாரமற்ற குடிநீர் மூலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறும் சுகாதாரத்துறை அதிகாரிகள், குடிநீரில் குளோரினேற்றம் செய்வதை கண்காணிக்கத் தவறியதாக ஊராட்சி செயலர் பாஸ்கர் என்பவரை பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.

ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், குடிநீரை காய்ச்சிப் பருகச் சொல்லும் சுகாதாரத்துறை அதிகாரிகள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்க்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.