​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலையில் தென் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் 'அயாவுவாஸ்கா' விழாவை நடத்த முயற்சித்த ரஷ்யர்கள் இருவர் கைது

Published : Jun 14, 2024 7:12 AM

திருவண்ணாமலையில் தென் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் 'அயாவுவாஸ்கா' விழாவை நடத்த முயற்சித்த ரஷ்யர்கள் இருவர் கைது

Jun 14, 2024 7:12 AM

தென் அமெரிக்க  நாடுகளில் நடைபெறும் 'அயாவுவாஸ்கா' விழா எனப்படும்  போதை மூலிகை விழாவை தமிழ்நாட்டில் நடத்த முயன்ற ரஷ்யர்கள் இருவரை  திருவண்ணாமலையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் போதைப் பொருட்களும், அமனீடா மஸ்காராபியா, அயாவுவாஸ்கா, மேஜிக் மஸ்ரூம், கம்போ எனப்படும் தவளை விஷம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 239 கிராம் சைலோ சிபின், டி.எம்.டி போன்ற மன நோய்களுக்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களையும் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் கூறினர்.