​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குவைத் தீ விபத்தில் சிக்கி கேரளா கொல்லத்தைச் சேர்ந்த லூகாஸ் என்பவர் பலி

Published : Jun 13, 2024 1:47 PM

குவைத் தீ விபத்தில் சிக்கி கேரளா கொல்லத்தைச் சேர்ந்த லூகாஸ் என்பவர் பலி

Jun 13, 2024 1:47 PM

குவைத் நாட்டில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், 12 ஆம் வகுப்பு முடித்த தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக தாய் நாட்டிற்கு வர இருந்த நிலையில் தீவிபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.

வெளிச்சக்காலா பகுதியை சேர்ந்த லூகாஸ் என்பவர் 15 வருடங்களுக்கு மேலாக குவைத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மூத்த மகள் அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் பெங்களூருவில் உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ப்பதற்காக விரைவில் கேரளா வர இருந்த நிலையில் உயிரிழந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.