​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு வழிபாடு

Published : Jun 13, 2024 12:40 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு வழிபாடு

Jun 13, 2024 12:40 PM

ஆந்திர மாநில முதலமைச்சராக 4ஆவது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மனைவி புவனேஸ்வரி, மகன் நாரா லோகேஷ் உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

தரிசனத்துக்குப் பிறகு, கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களையும், பண்டிதர்கள் வேத ஆசிகளையும் வழங்கினர்.