​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குவைத் நாட்டில் வேலை செய்து வரும் தீக்காயம் ஏற்பட்ட கணவரின் நிலை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்த மனைவி

Published : Jun 13, 2024 10:52 AM

குவைத் நாட்டில் வேலை செய்து வரும் தீக்காயம் ஏற்பட்ட கணவரின் நிலை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்த மனைவி

Jun 13, 2024 10:52 AM

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியான நிலையில், அங்கு தங்கியிருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப் என்பவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மங்காஃப் பகுதியில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் கடந்த 12 ஆண்டுகளாக ஃபோர்மேனாக பணியாற்றி வந்த முகமது ஷெரிப் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சக தொழிலாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரது தற்போதைய நிலை ஏறித்து அறிந்து தெரியப்படுத்த வேண்டும் என முகமது ஷெரிப்பின் தந்தை மற்றும் மனைவி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.