​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கையில் முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்... எச்சரிக்கை பலகைகள் வைக்க மக்கள் கோரிக்கை

Published : Jun 13, 2024 10:28 AM

இலங்கையில் முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்... எச்சரிக்கை பலகைகள் வைக்க மக்கள் கோரிக்கை

Jun 13, 2024 10:28 AM

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் சாலை அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து அதிக அளவிலான முதலைகள் வெளியேறி வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் அதிகமாக முதலைகள் வெளியேறுவதாக கூறப்படும் நிலையில், பகல் நேரங்களில் வயல் நிலங்களை ஒட்டிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் எருமை மாடுகள் முதலைகளுக்கு இரையாவதாகவும் கூறப்படுகிறது.

முதலைகள் குறித்த உரிய எச்சரிக்கை பலகைகள் இது வரை எங்கும் வைக்கப்படவில்லை எனவும், மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் செல்லும் அபாயம் இருப்பதால், இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.