​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு... குவைத் அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

Published : Jun 13, 2024 9:20 AM

குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு... குவைத் அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

Jun 13, 2024 9:20 AM

குவைத்தின் மங்காஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து குவைத்தின் 5 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குவைத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் உடனடியாக குவைத் புறப்பட்டுச் சென்றார்.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் குவைத் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தி, இந்தியர்களின் உடல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.