​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த 2 பெண்கள் கைது

Published : Jun 13, 2024 8:19 AM

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த 2 பெண்கள் கைது

Jun 13, 2024 8:19 AM

சுமார் 300 பேரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து 4 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து விட்டு ஓராண்டாக தலைமறைவாக இருந்த 2 பெண்களை பணம் கொடுத்து ஏமாந்தவர்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதம் வரையில் மாதந்தோறும் 15 ஆயிரமும் பின்னர் முதலீட்டு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனக் கூறி
சித்திரைப்பேட்டையைச் சேர்ந்த ரெஜினாபேசி என்பவர் பணம் வசூலித்த பின் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் புதுச்சேரியில் வங்கிக்கு வந்திருப்பதைத் தெரிந்து கொண்ட முதலீட்டாளர்கள் ரெஜினாபேசியையும், அவரது அலுவலக ஊழியரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.