​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழக்கறிஞரை தீர்த்துக்கட்டிய முன்னாள் நண்பன் உள்பட 3 பேர் கைது...

Published : Jun 12, 2024 6:59 PM

வழக்கறிஞரை தீர்த்துக்கட்டிய முன்னாள் நண்பன் உள்பட 3 பேர் கைது...

Jun 12, 2024 6:59 PM

சென்னை திருவான்மியூரில், தனது எதிரிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி இளம் வழக்கறிஞரை,2 பேருடன் சென்று நடுரோட்டில் வைத்து தீர்த்துக்கட்டியதாக முன்னாள் நண்பரே வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த கௌதமை, நேற்றிரவு கண்ணகி நகரைச் சேர்ந்த கமலேஷ் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தனியார் வங்கி ஏடிஎம் அருகே நண்பர்களுடன் நின்றிருந்த கௌதமை, கமலேஷ் பிடித்துக்கொள்ள நித்யானந்த் என்பவன்முதலில் தலையில் வெட்டிய நிலையில், பின்பு கமலேசும் வெட்டிவிட்டு தப்பியோடியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து 3 பேரும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அப்போது முன்னாள் நண்பனான கௌதம், படித்து வழக்கறிஞரான பின்பு தனக்கு எதிராக இருப்பவர்களை பிணையில் எடுப்பதுடன்அவர்களுக்கு ஆதரவாக தன்னிடம் வாக்குவாதம் செய்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கமலேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.