​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எஸ்.ஐ கொலை வழக்கு: 7 பேர் மீது என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வரைவு தாக்கல்

Published : Jun 12, 2024 9:35 AM

எஸ்.ஐ கொலை வழக்கு: 7 பேர் மீது என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வரைவு தாக்கல்

Jun 12, 2024 9:35 AM

கன்னியாகுமரியில் எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 7 பேரும் டெல்லி, பெங்களூரு, சேலம் சிறைகளிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எஸ்.ஐயை கொன்ற அப்துல்சலீம் உள்ளிட்டோருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் இந்த வழக்கு என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டது. இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வரைவு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 7 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.