​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற ஜீப்.. டீக் கடையில் நின்றிருந்த 3 பேர் பலி..!

Published : Jun 11, 2024 9:14 PM

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற ஜீப்.. டீக் கடையில் நின்றிருந்த 3 பேர் பலி..!

Jun 11, 2024 9:14 PM

மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த கண்ணன் என்பவர் சாயல்குடியிலிருந்து மதுரைக்கு திரும்பும் போது அவர் ஓட்டிய ஜீப் சாலையில் தாறுமாறாக ஓடி மோதியதில், மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே டீக் கடையில் நின்றிருந்த காளிமுத்து, விஜயராமன், பெருமாள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

ஜீப்பை விட்டுவிட்டு கண்ணன் தப்பி ஓடினார். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கண்ணனை ம.ரெட்டிப்பட்டியில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.