​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகள் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில், மகளின் காதலனை கடத்திய தந்தை.. சுற்றி வளைத்த போலீசார்..!

Published : Jun 11, 2024 7:49 PM

மகள் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில், மகளின் காதலனை கடத்திய தந்தை.. சுற்றி வளைத்த போலீசார்..!

Jun 11, 2024 7:49 PM

மகள் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில், மகளின் காதலனை கடத்திய தந்தை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம் புதூரை சேர்ந்த ரங்கீலா என்ற பெண், பெங்களூருவில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வரும் நிலையில், சென்னையில் வேலை பார்த்து வந்த மகளின் காதலனான முகமது அலியை ரங்கீலாவின் தந்தை உறவினர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றார்.

முகமது அலியுடன் இருந்த நபர் இது பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததையடுத்து விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் சுங்கச்சாவடியில் காரை சுற்றுவளைத்த போலீசார் முகமது அலியை மீட்டனர்.