​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் வீட்டு கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு

Published : Jun 11, 2024 5:36 PM

புதுச்சேரியில் வீட்டு கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு

Jun 11, 2024 5:36 PM

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உள்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்த விஷவாயு அப்பகுதியில் இருந்த வீடுகளில் கழிவறை வாயிலாக வெளியேறியதால் மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.