​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சையில் டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published : Jun 11, 2024 12:44 PM

தஞ்சையில் டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Jun 11, 2024 12:44 PM

தஞ்சையில் மகன்கண்முன்னே டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரை சேர்ந்த பாபு, தொழில் போட்டி காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என 6 மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தது தெரியவந்தது.

தற்போது அவர் கொலையான நிலையில் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வைப்பூர் காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளரும் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளருமான அகிலாண்டேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.