​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் ஆம்னி வேன் ஓட்டி 2 சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

Published : Jun 11, 2024 12:36 PM

முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் ஆம்னி வேன் ஓட்டி 2 சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

Jun 11, 2024 12:36 PM

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் கார் ஓட்டி பழகியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் 17 வயது மகன் லோகேஷ் தங்களது தந்தையின் ஆம்னி வேனை எடுத்துக் கொண்டு ரமேஷ் என்பவரின் 14 வயது மகன் சுதர்சனத்துடன் கபிலர்மலை - பரமத்தி சாலையில் கார் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது.

சுதர்சனம் வேனை ஓட்டிய நிலையில், பரமத்தியில் இருந்து ஈரோடு நோக்கி விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மீது ஆம்னி வேன் மோதி சுக்குநூறாக நொறுங்கியதில் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.