​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகம் வெளியேற உச்ச நீதிமன்றம் உத்தரவு... உதவ தொழிலாளர்கள் கண்ணீருடன் தமிழக அரசுக்கு கோரிக்கை

Published : Jun 11, 2024 7:01 AM

மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகம் வெளியேற உச்ச நீதிமன்றம் உத்தரவு... உதவ தொழிலாளர்கள் கண்ணீருடன் தமிழக அரசுக்கு கோரிக்கை

Jun 11, 2024 7:01 AM

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் செயல்பட்டு வரும் தேயிலை தோட்ட நிர்வாகம், இம் மாத இறுதிக்குள் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி இடத்தைக் காலி செய்ய வலியுறுத்தி வருகிறது.

ஐந்து தலைமுறையாகப் பணியாற்றி வரும் தாங்கள், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும், தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தேயிலை நிறுவனம் வெளியேற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.