​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நூதனமுறையில் ஏடிஎம் மெஷினில் பணத்தை திருடிய சிறுவன்... ஒரு லட்சம் பணம், 10 ஏடிஎம் கார்டுகள் மற்றும் இரண்டு சாவிகள் பறிமுதல்

Published : Jun 11, 2024 6:48 AM



நூதனமுறையில் ஏடிஎம் மெஷினில் பணத்தை திருடிய சிறுவன்... ஒரு லட்சம் பணம், 10 ஏடிஎம் கார்டுகள் மற்றும் இரண்டு சாவிகள் பறிமுதல்

Jun 11, 2024 6:48 AM

சென்னை அருகே ஆவடியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் திருடிய  உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில் உள்ள ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க வங்கி அட்டையை சொருகி பின் நம்பரை பதிவிட்ட பிறகு பணம் எடுத்ததாக குறுந்தகவல் மட்டுமே வந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், அங்கே வாடிக்கையாளர்கள் சிலர் பணம் எடுக்க காத்திருந்தபோது ஏடிஎம் மெஷினை திறந்து பணம் எடுத்த சிறுவனை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.