​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமானத்தில் சிகரெட் புகைத்தவரை கைது செய்து சிறையிலடைப்பு

Published : Jun 10, 2024 7:37 PM

விமானத்தில் சிகரெட் புகைத்தவரை கைது செய்து சிறையிலடைப்பு

Jun 10, 2024 7:37 PM

சென்னையிலிருந்து மலேசியா சென்ற இண்டிகோ விமானத்திற்குள் புகைப்பிடித்த நபரை விமானப் பணியாளர்கள் கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த விமானம் புறப்படத் தயாரான போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற பயணி இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

பாதுகாப்பு சோதனைகளை மீறி விமானத்துக்குள் அவர் எப்படி சிகரெட் மற்றும் லைட்டரை கொண்டு வந்தார் என்று கேள்வி எழுப்பிய பணிப்பெண், விமானியிடம் தெரிவித்து ஆறுமுகத்தை விமானத்தில் இருந்து கீழே இறக்கி போலீசில் ஒப்படைத்தனர். வேலைக்காக மலேசியா புறப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 1 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.