​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பதவியேற்ற பின் விவசாயிகளுக்காக பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து

Published : Jun 10, 2024 3:51 PM

பதவியேற்ற பின் விவசாயிகளுக்காக பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து

Jun 10, 2024 3:51 PM

பிரதமராக முறைப்படி பதவியேற்ற மோடி, தனது அலுவலகத்துக்கு சென்றதும் முதன் முதலாக விவசாயகள் நல நிதித் திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் 20,000 கோடி ரூபாய் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வேளாண் மக்களின் நலனுக்காக தங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தெரிவித்த பிரதமர், அந்த வகையில் விவசாயிகள் சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும் என்று தாம் கருதியதாகவும் கூறினார்.