​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்டிருந்த 4 பிணையக்கைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்

Published : Jun 10, 2024 12:15 PM

அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்டிருந்த 4 பிணையக்கைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்

Jun 10, 2024 12:15 PM

ஹாமாஸின் கடும் தாக்குதலுக்கு மத்தியில், ஒரு பெண் உள்பட 4 பிணைக்கைதிகளாக பட்டப்பகலில் காஸாவில் இருந்து மீட்டுவந்த காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகளை, பல வாரங்களாக கண்காணித்து, அவர்களை மீட்க பிரத்யேக பயிற்சி மேற்கொண்டதாகவும், பின் ஹமாஸ் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக நுழைந்து பிணைக்கைதிகளை மீட்டு ஹெலிகாப்டரில் அழைத்துவந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த மீட்பு நடவடிக்கையின்போது, இஸ்ரேல் விமானங்கள் பொழிந்த குண்டு மழையில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.