​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேரை சுமார் 200 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பிடித்த போலீசார்

Published : Jun 10, 2024 12:02 PM

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேரை சுமார் 200 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பிடித்த போலீசார்

Jun 10, 2024 12:02 PM

சென்னையை அடுத்த புழல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் ரவுடி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 70 சவரன் நகைகளை மீட்டனர்.

கடந்த 20ஆம் தேதி வி.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது தனது வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு 200க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ரவுடி சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.