​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடிதம் எழுதிவைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

Published : Jun 09, 2024 1:29 PM

கடிதம் எழுதிவைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

Jun 09, 2024 1:29 PM

திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரும், களப்பாலில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தனது சாவிற்கு காரணம் என்று கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புழுதிக்குடி மற்றும் களப்பால் கிராமங்களில் உள்ள டாஸ்மாக்கில் மாறி, மாறி பணியாற்றி வந்த பாபு என்பவர் கடந்த 2 நாட்களாக பணிக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக களப்பால் கடையில் பில் போடவில்லை என்றும், தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக தற்கொலை வழக்குப்பதிவு செய்து அவர் கடிதத்தில் குறிப்பிட்ட பில் என்ன என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.