​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம் - மாநகராட்சி

Published : Jun 08, 2024 3:04 PM

மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம் - மாநகராட்சி

Jun 08, 2024 3:04 PM

சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறி யாராவது மிரட்டி பணம் கேட்டால் போலீசில் புகார் அளிக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் அண்மைக் காலமாக விதிகளை மீறி வேன்களுக்கு 400 ரூபாய் வரையும், கார்களுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு 30 ரூபாய் வரையும் கட்டணம் வசூலித்து ரசீது கொடுப்பதில்லை என புகார் எழுந்த நிலையில் மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.