​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 நாள் வேலை செய்யும் பெண் பணியாளர்களின் ஜிஎஸ்டி வரி பாக்கிக்காக ரூ.40 கோடி அபராதம்

Published : Jun 08, 2024 9:27 AM

100 நாள் வேலை செய்யும் பெண் பணியாளர்களின் ஜிஎஸ்டி வரி பாக்கிக்காக ரூ.40 கோடி அபராதம்

Jun 08, 2024 9:27 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில, கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தனக்கு நோட்டீஸ் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த மலர் என்பவர், ஜி.எஸ்.டி. வரி செலுத்தவில்லை எனக்கூறி வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100நாள் வேலை பணியாளராக வேலைபார்ப்பதாகவும் கூறினார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மலர் புகார் அளித்துள்ளார்.