​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு மாத காலத்திற்கு கடன் தொகையை வசூலிக்க வரவேண்டாம் - பலகை வைத்த ஊர்மக்கள்

Published : Jun 07, 2024 5:14 PM

ஒரு மாத காலத்திற்கு கடன் தொகையை வசூலிக்க வரவேண்டாம் - பலகை வைத்த ஊர்மக்கள்

Jun 07, 2024 5:14 PM

சிவகாசி அருகே மீனம்பட்டி என்ற கிராமத்தின் நுழைவு வாயிலில்., ஒரு மாத காலத்திற்கு கடன் தொகை வசூலிக்க யாரும் வர வேண்டாம் எனக் கூறி ஊர் மக்கள் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர்.

வெடிவிபத்துகள் காரணமாக பட்டாசு ஆலைத் தொழில் முடங்கி வருமானம் இல்லாத நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறின.

அது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற அசம்பாவிதங்களை தங்கள் ஊரில் தடுக்கவே அறிவிப்பு பலகை வைத்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.