அரசு மருத்துவமனை பணியாளர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததாக உறவினர்கள் புகார்
Published : Jun 07, 2024 3:56 PM
அரசு மருத்துவமனை பணியாளர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததாக உறவினர்கள் புகார்
Jun 07, 2024 3:56 PM
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
செங்கம் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தியின் வயிற்றில் குழந்தையின் கழுத்தை குடல் சுற்றியிருப்பதாகக் கூறி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
அங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து உரிய சிகிச்சை அளிக்காமல் அலை கழித்ததால் இரவு முழுவதும் ஆர்த்தி வலியால் துடித்ததாகவும், அதிகாலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வெளியே சென்று ஆப்ரேஷன் கிட் வாங்கி வருமாறு தங்களிடம் கூறியதாகவும் ஆர்த்தியின் தாயார் தெரிவித்தார்.