சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற சுற்றுலா வேன், ராசிபுரம் அருகே கட்டுப்பாடை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த சேதமடைந்த சுற்றுலா வேனின் முன் பகுதியில் ஓட்டுநரின் கால் சிக்கிக்கொண்ட நிலையில், ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர்.