​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் பிரிந்த தாய் யானையுடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி... பாகன்களை வைத்து குட்டி யானைக்கு பயிற்சி

Published : Jun 07, 2024 7:41 AM

கோவையில் பிரிந்த தாய் யானையுடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி... பாகன்களை வைத்து குட்டி யானைக்கு பயிற்சி

Jun 07, 2024 7:41 AM

கோவை மருதமலை வனப்பகுதியில் பிரிந்த தாய் யானையுடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அட்டுக்கள் பகுதியில் முகாம் அமைத்து குட்டி யானையை பராமரித்து வரும் வனத்துறையினர், டாப்ஸ்லிப் வனப்பகுதியில் இருந்து யானை பாகன்களை வரவழைத்து குட்டி யானையிடம் பேசும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லும் போது தாய் யானையுடன் சேர குட்டியானை ஒலி எழுப்ப வேண்டும் அதற்கான பயிற்சி குட்டி யானைக்கு வழங்கப்பட்டது.